திங்கள், 27 அக்டோபர், 2014

காசாவில் 469 குழந்தைகள் படுகொலை ~ யுனிசெப் தகவல்

காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் பயங்கரத்தாக்குதலில் இதுவரை 469 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், 18 வயதுக்கு கீழ் உள்ள சுமார் 10 லட்சம்குழந்தைகள் ஆதரவற்று இருப்பதாகவும் ஐ.நாவின் யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.
காசாவில் போருக்கு முடிவுஏற்படாத நிலையில், குழந்தைகளின்பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பது மிகவும் கவலைஅளிப்பதாக உள்ளது. 10 லட்சம் குழந்தைகள் போர்ச் சூழலில் குடும்பங்களை இழந்து ஆதரவின்றி உள்ளனர். நாங்கள்அவர்களிடன் பேசும்போது, அவர்கள் உளவியல் ரீதியாக மிக பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது தெரிகிறது.குடும்பத்தினர் சிலரை இழந்த குழந்தைகள், தங்களது மற்ற உறவுகளுடன் பேசக்கூட மறுக்கின்றனர். தொடர்ந்து கொடூர கனவுகள், படுக்கையில் சிறுநீர் கழித்தல் என பல்வேறு வகையில் அவர்களது பயத்தை வெளிப்படுத்துகின்றனர் என்று காஸாவில் மனித உரிமை உதவிகளை மேற்கொண்டு வரும் ஐ. நா அதிகாரி யுனிசெப் கூட்டத்தில் தெரிவித்ததாக செய்திகள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துரை வடிவ செய்தி